Category: Registration

All about issues connected with Registration of Properties

  • Market Value Guideline: Judgment & After | Update

    Market Value Guideline: Judgment & After | Update

    The government has completed the revision of the Guideline Values for properties. The Division Bench of the Madras High Court has been informed, and the Draft Guideline Values are now published for public viewing and suggestions. Normally, a statutory period of 15 days is allowed for public objections. Once this period ends, the new Market Value Guidelines will become official, likely from July 2024.

    The revision was undertaken by District level valuation committees under the District Collector, guided by the State Level Valuation Committee as directed by the Madras High Court.

    Previously, the Tamil Nadu Government had increased the Guideline Values without following the due process outlined in the Stamp Act, reverting to 2012 values. This decision was challenged by the Confederation of Real Estate Developers Association of India (CREDAI), and the court struck it down. Now, the government has followed the proper procedure and updated the court accordingly.

    For detailed information, refer to the full article below.


    தமிழ் நாட்டில் நிலத்தின் வழிகாட்டும் மதிப்பு ( Market Value Guidelines or MVG) சீரமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

    என்ன நடந்தது? | Why new Market Value Guidelines MVG?

    தமிழ் நாடு அரசு சென்ற 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடப்பாக்கிய சந்தை வழிகாட்டும் மதிப்பு பற்றிய சுற்றறிக்கைச் செல்லாது என்று, இந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. எனவே உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சந்தை வழிகாட்டு மதிப்பை நிர்ணயிக்கத் தீர்மானித்த அரசு அந்தப் பணிகளை வேகமாக செய்து கொண்டிருக்கிறது.

    நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் அதன் விளைவுகள் | Madras High Court’s Ruling and Its Implications

    இந்த உயர்நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக, மீண்டும் 2017-ஆம் ஆண்டு நிலவில் இருந்த சந்தை வழிகாட்டு மதிப்புகளை பின்பற்ற வேண்டிய நிர்ப்பந்தம் தமிழ் நாடு அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

    2017 ஆம் ஆண்டின் வழிகாட்டு மதிப்பு என்பது , 2012 ஆம் ஆண்டின் வழிகாட்டு மதிப்புகளை ஃப்ளாட் ரேட்டாக 33 % குறைத்து அன்றைய அரசு செய்த அறிவிப்பு ஆகும்.

    2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை, இந்த 2017 ஆம் ஆண்டைய வழிகாட்டு மதிப்புத் தான் நடைமுறையில் இருந்து வந்தது.

    தமிழ் நாடு அரசின் மார்ச் 2023 அரசாணையின் பொருள், 2023 ஏப்ரல் முதல், 2012 ஆம் ஆண்டின் வழிகாட்டு மதிப்புத் தான் பின்பற்றப்படும் என்பது தான். இது, வழிகாட்டு மதிப்பை 33% உயர்த்தியதாக அமைந்து விட்டது.

    விதிமுறைகள் மீறல் | Violation of Due Process

    அரசுக்கு இப்படி வழிகாட்டு மதிப்பை உயர்த்தவோ குறைக்கவோ அதிகாரம் உண்டு என்பது உண்மை தான். அதற்கு ஒன்றும் உயர்நீதிமன்றம் தடை விதித்து விடவில்லை.ஆனால், அப்படிச் சந்தை வழிகாட்டு மதிப்புகளை (MVG) திருத்தி அமைப்பதற்கு விதிமுறைகள், வழிமுறைகள் சட்டத்தில் உள்ளன. அவற்றைப் பின்பற்றவில்லை என்பது தான் எதிர் தரப்பு வாதம்.

    நீதிமன்றத் தீர்ப்பு | Court’s Ruling

    அப்படி விதி முறைகளைக் கையாண்டு சட்டப்படி வழிகாட்டு மதிப்புகளை திருத்தி அமைக்க வில்லை; எனவே இந்த அரசாணை சட்ட விரோதமானது என்ற அடிப்படையில் தான் இந்த வழக்கு தொடரப்பட்டது. அந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதியரசர்கள், அரசின் இந்த அறிவிப்பைச் செல்லாது என்று அறிவித்துவிட்டனர். வழிகாட்டு மதிப்பை உயர்த்த வேண்டும் என்றால், உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறினர்.

    அதே நேரத்தில், இந்த காலகட்டத்தில் வழிகாட்டு மதிப்பு உயர்த்தப்பட்ட கடந்த 2023 ஏப்ரல்  மாதம் முதல் இந்த தீர்ப்பு வந்த 2024 மார்ச் மாதம் வரை பத்திரப் பதிவு செய்து கொண்டவர்கள், இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் அதிக முத்திரைக் கட்டணம் செலுத்தி இருந்தாலும் திருப்பிக் கேட்க முடியாது என்றும் தீர்ப்பிலேயே குறிப்பிட்டும் விட்டனர்.

    அது சரி,அது என்ன விதி முறை? எதை அரசு மீறி விட்டது என்பதையும் தெரிந்து கொள்வோம் | The Due Process that the Government Has Violated

    பத்திரப் பதிவுக்கு முத்திரைக் கட்டணம் நிச்சயிப்பது பற்றி இந்திய முத்திரைச் சட்டம், 1899 (Indian Stamp Act, 1899) தெரிவிக்கிறது.

    இந்தச் சட்டத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்ட விதிகள்(Rules) , சந்தை மதிப்பை எப்படி நிர்ணயிக்க வேண்டும் என்பது பற்றிக் கூறுகிறது.

    அதன்படி, மாநில அரசு பதிவுத்துறைத் தலைவர் தலைமையில் மாநில அளவில் ஒரு உயர் மட்டக் குழு அமைக்க வேண்டும். இந்த உயர்மட்டக் குழு தான் மாநிலத்தின் எல்லா பகுதிகளிலும் சந்தை மதிப்பை நிர்ணயிக்கும் அதிகாரம் படைத்த அமைப்பு. இந்த உயர்மட்டக் குழுவுக்கு உதவும் விதமாக மாவட்டந்தோறும் மாவட்ட கலெக்டர் தலைமயில் துணைக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

    உயர்மட்டக் குழுவின் பங்கு | Role of High Power Committee

    இந்த உயர்மட்டக் குழு அமைத்து செயல்படுவது சம்பந்தமான விதிகள்(Rules) 2008 ஆம் ஆண்டு வகுக்கப்பட்டு, 2010 ஆம் ஆண்டு உயர் மட்டக் குழுவும் அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் முடிவின்படி தான் 2012 ஆம் ஆண்டு சந்தை வழிகாட்டு மதிப்புகள் (MVG)நிர்ணயிக்கப்பட்டன.

    இந்த மதிப்புகள் தான் 2017 ஆம் ஆண்டுஜூன் மாதம் வரை பின்பற்றப் பட்டு, ஜூன் மாதம் 9ஆம் தேதி முதல் 33% குறைக்கப்படடது.

    அப்படி குறைக்கப்பட்ட சந்தை மதிப்புகளை மீண்டும் 2012 நிலைக்கு கொண்டு வந்தது தான் இப்போது பிரச்சினைக்குள்ளாக்கப்பட்டு செல்லாது என்று அறிவிக்கப் பட்ட அரசாணை. இந்த நடைமுறை , மேலே சொல்லபட்ட விதிமுறைகளை பின்பற்றாமல், ஒரு அரசாணையின் மூலம் நடந்தேறி விட்டது.

    அரசின் இந்த முடிவுக்குக் காரணம் என்ன? | What is the reason for the government’s decision?

    இப்போது நிலத்தின் மதிப்புகள் வெகுவாக உயர்ந்து விட்டன; சில இடங்களில் அருகருகே இருக்கும் இடங்களுக்குச் சந்தை வழிகாட்டு மதிப்பில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கின்றன்; சில இடங்களில் மார்க்கெட் விலையை விட சந்தை வழிகாட்டு மதிப்பு(MVG) அதிகமாக இருக்கிறது. இப்படிப்பட்ட விஷயங்களை கருத்தில் கொண்டு தான் அரசு சந்தை மதிப்புகளை சீரமைப்பது என்ற முடிவுக்கு வந்து, முதற்கட்டமாக அதுவரை நிலவில் இருந்த ஜூன் 2017 வழிகாட்டு மதிப்புகளுக்கு பதிலாக, 2012 வழி காட்டு மதிப்புகளை பின்பற்ற வேண்டும் என்ற அரசாணையை வெளியிட்டது.

    இதன்மூலம் அரசுக்கு உடனடியாக அதிக வருமானம் கிடைக்கும் என்று அரசு கணக்கு பண்ணியிருக்கலாம்.

    அரசுக்குப் பாடம் | Lesson for the Government

    இந்த அரசின் நடவடிக்கை விதிமீறல் என்பதாக credai  அமைப்பு வழக்கு தொடுத்து வெற்றியும் பெற்று விட்டது.

    ஆக, இந்த தீர்ப்பின் படி, சந்தை மதிப்புகளை உயர்த்துவதற்கு உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது தான் முக்கிய கருத்து.

    தற்போது புதிய வழிகாட்டு மதிப்புகளை சட்டப்படி அரசு தயாரிக்கிறது | Government Prepares New Market Value Guidelines as per Process laid down by law

    இந்தப் பின்னணியில் தான் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு தமிழ் நாடு முழுவதும் சந்தை மதிப்பை மறுசீரமைக்கும் பணி வெகு வேகமாக நடைபெற்று வருவதாக செய்திகள் கூறுகின்றன. இன்னும் ஓரிரு வாரங்களில் இந்தப் பணிகள் முடிவடையும் என்றும் சொல்லப்படுகிறது.

    மக்களின் கருத்துக் கேட்பு | Suggestions of Public Should be Heard

    இப்படி உயர்மட்டக் குழு நிர்ணயிக்கும் சந்தை மதிப்பு விவரங்களை அமல் படுத்தும் முன்னர், மக்களின் கருத்துக் கேட்பு நடத்தப் பட வேண்டும் என்பதும் அந்த விதிகளின் கூறு. மட்டுமல்லாமல், தீர்ப்பிலும் அது சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. உயர் மட்டக் குழு இறுதி செய்த சந்தை வழிகாட்டு மதிப்புகளில்(MVG) ஏதாவது ஆட்சேபங்கள் இருந்தால் தெரியப் படுத்த அவகாசம் இருக்கும்.

    இணைய தளத்தில் பதிவேற்றம் | Uploading the Revised Rates in REGINET

    அரசு இப்போது மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைகள் முடிந்து புதிய சந்தை வழிகாட்டு மதிப்புகள் இறுதி செய்யப்பட்டு வெளியாகும் போது மக்களுக்குத் தெரிய வரும். பின்னர் புதிய சந்தை வழிகாட்டு மதிப்புகள் அரசின் REGINET இணய தளத்தில் பதிவேற்றப் படும்.

  • Introduction of Composite Value Registration in Tamil Nadu

    Introduction of Composite Value Registration in Tamil Nadu

    Composite Value Registration

    The Composite Value Registration system, introduced by the Tamil Nadu government effective from December 1, 2023, is a new approach to the registration of apartments and villa plots. This system ensures that the entire property, including both the land and the constructed area, is registered in a single document. According to the government, this will augment revenue and streamline the registration process.

    Previous System and Its Issues

    Before the Composite Value Registration, buyers and sellers of apartments had to register two separate documents: one for the undivided share of land (UDS) and another for the construction agreement. This practice led to several issues. Often, the full land parcel in a project was not registered and transferred to the buyers. Sellers or promoters could retain a portion of the land, allowing them to construct beyond the sanctioned plan and sell later, leading to disputes with buyers. Common issues included disputes over common areas, car parking, and plan violations, which often surfaced after buyers began occupying their properties and forming associations.

    Addressing Plan Deviations and Revenue Loss

    The Composite Value Registration system addresses these issues by ensuring that the entire property, including the land and construction, is registered comprehensively. This reduces plan deviations, which previously required later regularization. Additionally, the old practice resulted in revenue loss for the government. Separate registrations for UDS and construction agreements led to lower revenue. The new system integrates these registrations, enhancing government revenue.

    Benefits for Buyers

    For buyers, the new system provides fully documented property values, facilitating bank financing for property purchases. Although there might be an increase in stamp duty and overall costs for buyers, the process is already prevalent in many states and runs smoothly.

    Government Study and Implementation

    According to a government circular, officials studied similar systems in other states, particularly Karnataka, before implementing the scheme in Tamil Nadu. They consulted industry representatives to refine the scheme. Despite these consultations, the real estate industry expressed strong resistance, fearing the new system would close loopholes and burden buyers, affecting market sentiments.

    Composite Value Determination

    To implement the system, the government established Composite Values for all survey numbers and streets. Initially, three sets of values were proposed but faced widespread opposition and were quickly withdrawn. The government then finalized Composite Values for over 3 lakh streets in Tamil Nadu and 1.5 lakh streets in Chennai, which are now available on the registration department’s website, REGINET. The Deputy Inspector General of Registration of respective districts determined these values based on prevailing local rates.

    Calculation of Composite Values,Stamp Duty and Registration Fee

    The Composite Values are based on the super built-up area of the flat, promoting transparency and preventing overcharging by promoters. The property value is calculated by multiplying the Composite Value (per sq ft) with the super built-up area of the apartment. Stamp duty and registration fees vary based on the property value:

    • For properties below ₹50 lakh, stamp duty is 4% and registration fee is 2%.
    • For properties valued between ₹50 lakh and ₹3 crore, stamp duty is 5% and registration fee is 2%.
    • For properties over ₹3 crore, stamp duty is 7% and registration fee is 2%.

    Impact on Property Registration Costs

    Although the rates appear lower than current charges for land or construction agreement registration, the new system requires paying stamp duty and registration fees on the total property value, potentially increasing costs in some cases. Despite industry opposition, the government remains firm on the new system. Reports indicate that apartment registrations continue to perform well across most areas.

    Summary

    The Composite Value Registration system represents a significant step towards transparent and streamlined property transactions in Tamil Nadu. By addressing past issues and ensuring comprehensive property documentation, the new system benefits both the government and property buyers. While it faces opposition from the real estate industry, the government’s commitment to the new system underscores its potential to revolutionize property registration in the state.

  • Forged Document Cancellation: Sec. 77A |  Updates

    Forged Document Cancellation: Sec. 77A | Updates


    Status of Court Cases on Section 77A

    For the backstory, read on…

    மோசடி  பத்திரங்களை  ரத்து செய்யும் அதிகாரம்  மாவட்டப் பதிவாளருக்கு வழங்கி  இந்திய பதிவுச் சட்டத்திற்கு, தமிழ் நாடு அரசால் கொண்டுவரப்பட்ட  சட்ட திருத்தம், (Section 77A of Registration Act 1908)   பற்றிய வழக்குகள்  இன்னும்  ஒரு முடிவுக்கு வரவில்லை.

    மீண்டும் இந்த வழக்குகள் இந்த மாதம்(மார்ச்) 26 அன்று விசாரணக்கு வர இருக்கிறது.

    March 26 Hearing: Case Posted to 4th April, 2024.

    The case was heard on 4th April 2024, and finally on 15th and 16th April 2024. The advocates were then asked to submit their written submissions by 22nd April 2024, and the judgme

    nt was reserved.


    பதிவுத்துறைத் தலைவரின் சுற்றறிக்கை

    Circular of Inspector General Of Registration

    சென்னை உயர் நீதிமன்றத்திலும்,  அதன் மதுரைக் கிளையிலும்,  இந்தச் சட்ட திருத்தம் (77A)சம்பந்தமாக  தொடரப்பட்ட வழக்குகள்  காரணமாக, பதிவுத்துறைத் தலைவர் (Inspector General of Registration),  கடந்த  2023 செப்டம்பர் மாதம்,  மறு அறிவிப்பு வரும் வரை  இந்தச் சட்ட திருத்தத்தின் கீழ்  எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம்  என்று  சுற்றறிக்கை அனுப்பிய பின்,    மனுக்கள் எல்லாம்  அங்கங்கே  தங்கிப் போயின.

    பதிவுத் துறை தலைவர் இப்படி  ஒரு சுற்றறிக்கை அனுப்பத் தேவை என்ன?

    Reason for the Inspector General of Registration to issue such a Circular

    இந்தச் சட்டத் திருத்தத்திற்கு  உயர் நீதிமன்றம் தடை விதிக்காமல் இருந்தாலும் கூட,  இதில் உள்ள சட்ட பிரச்சனைகளை பற்றி  இறுதியாக முடிவு எடுக்க,  எல்லா வழக்குகளையும்  ஒரு  விரிவாக்கப்பட்ட அமர்வுக்கு (larger bench)  அனுப்பப்பட்டு விட்ட காரணத்தினால்,  அந்த அமர்வின் தீர்ப்பு வரும் வரை  மேற்கொண்டு எந்த  நடவடிக்கையும்  பதிவுத்துறையால்  எடுக்க வேண்டாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே எல்லா நடவடிக்கைகளையும் ஒத்தி வைக்க வேண்டிய தேவை பதிவுத் துறைக்கு ஏற்பட்டது.

    சென்னை உயர்நீதிமன்றத்தின்  இந்த முடிவுக்கு பின்னணி என்ன?

    Background to the Madras High Court’s Decision; Why Larger Bench?

    இந்தச் சட்டத்தை  முன் தேதியிட்டு (retrospective effect)  அமல்படுத்த முடியுமா?  என்பது உயர் நீதிமன்றத்தின் முன்னுள்ள ஒரு முக்கிய கேள்வி.

    இந்த சட்ட திருத்தம் சம்பந்தமாக ஒரு வழக்கு, மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு வந்த போது, இந்தச் சட்டம் என்றைக்கு அமலில் வந்ததோ  (அதாவது 16 ஆகஸ்ட் 2022),  அதற்குப் பின்னர் பதியப்பட்ட போலி பத்திர பதிவுகளை பற்றி மட்டும் தான்  விசாரணை மேற்கொண்டு ரத்து செய்ய முடியும் என்று தீர்ப்பு வழங்கினார் நீதியரசர்.

     ஏற்கனவே மற்றொரு நீதியரசர், இந்தச் சட்டத் திருத்தத்தில்  அப்படி எதுவும் குறிப்பிடவில்லை,  எனவே  பழைய  போலி பத்திர பதிவுகளுக்கும்  இந்தச் சட்ட திருத்தம் பொருந்தும் என்று கூறி இருந்தார்.

    முதலில் குறிப்பிட்ட இந்தச் சட்ட திருத்தம் பழைய பத்திரங்களுக்குப் பொருந்தாது என அளிக்கப்பட்ட தீர்ப்பு, இப்போது தீர்ப்பளித்த நீதியரசரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை என்பது, பின்னர் மற்றுமொரு நீதியரசர், (மூன்றாவது நீதியரசர்), இன்னொரு வழக்கு விசாரணக்கு வந்தபோது தெளிவு படுத்தி, இப்படி மாறுபட்ட இருதீர்ப்புகள் உள்ள நிலையில்,  இந்த பிரச்சினையை ஒரு விரிவான அமர்வு தான் (larger bench) விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்து, அதை உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்திற்கும் தெரியப்படுத்திவிட்டார். இப்படித்தான் விரிவான அமர்வுக்கு வழக்கு சென்றுள்ளது.

     விரிவாக்கப்பட்ட அமர்வுக்கு அனுப்பி வைக்கப்பட்ட முடிவு, சென்ற 2023 ஆம் ஆண்டு  மார்ச் மாதம் 27ஆம் தேதி  வழங்கப்பட்டது. அதனடிப்படையில் விசாரணை நடந்து கொண்டும் இருக்கிறது. எனவே தான், பதிவுத்துறை தலைவர் எல்லா நடவடிக்கைகளயும் தற்காலிகமாக நிறுத்திவைத்து உத்தரவு இட்டுள்ளார்.

    விரிவான அமர்வில் விசாரணை-

    Proceedings before the Larger Bench

    சென்ற    வாரம்  21ஆம் தேதி (மார்ச் 2024) விசாரணைக்கு வந்த  போது,  அதுவரை  இந்தச்    சட்ட திருத்தத்தின் அடிப்படையில்  எடுக்கப்பட்ட  அனைத்து நடவடிக்கைகளையும் பற்றிய  முழு விவரங்களையும்  நீதிமன்றத்திற்கு    தர வேண்டும் என்று  நீதி அரசர்கள்  உத்தரவிட்டு உள்ளனர்.  மீண்டும் விசாரணை    இந்த  மார்ச் மாதம்  26 ஆம் தேதி  நடைபெறும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விரிவான அமர்வின் முன்னுள்ள பிரச்சினைகள்-

    Issues raised before the Larger Bench on Section 77A

     இந்தச் சட்ட திருத்தம்,  முன்பு பதியப்பட்ட  போலி பத்திரங்களுக்கும் பொருந்துமா என்ற கேள்வி மட்டுமல்லாமல்(retrospective effect),  இந்த வழக்குகள் வேறு பல  சட்ட பிரச்சனைகளையும்  முன்னிறுத்தி உள்ளது.    குறிப்பாக,  மாவட்ட பதிவாளருக்கு  இந்த அதிகாரத்தை  தரக்கூடாது, ஏனெனில்  அவர்   சட்டம் படித்தவராக  இருப்பதற்கு வாய்ப்பு இல்லை, எனவே அவரால் எது போலி பத்திரம் என்று கண்டறிய முடியாது,  என்பது போன்ற  வாதங்களும்  முன்வைக்கப்படுகின்றன.

    மேலும்,  இந்த போலி பாத்திரங்களை  ரத்து செய்வது சம்பந்தமான  வழிமுறைகள் விதிமுறைகள்  பற்றி  எந்த விதிகளையும் (rules) மாநில அரசு   இயற்றவில்லை.   பதிவுத் தலைவரின்  சுற்றறிக்கைகளும்,  கடிதங்களும் மட்டுமே  வழிகாட்டுதல்களாக உள்ளன.  இது சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை என்பது மற்றொரு வாதம்.

    தீர்மானிக்கப்பட வேண்டியவை என்று நீதிமன்ற அமர்வால் வரையறுக்கப்பட்ட விஷயங்கள்-

    Issues framed by the Court to decide on Section 77A case

    ,இந்த வாதங்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு,  நான்கு  முக்கிய பிரச்சினைகளை  பற்றிய  தீர்வுக்கான  முயற்சியில் விரிவான அமர்வு(Larger Bench) ஈடுபட்டுள்ளது.

     அவை:

    i) பதிவுக்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் உள்ள வாசகங்கள்(recitals), அத்தகைய ஆவணம் மோசடியாக செயல்படுத்தப்பட்டதா (executed) அல்லது பதிவு செய்யப்பட்டதா (registered) என்பதை தீர்மானிக்க ஆய்வு செய்யப்படலாமா;

    ii) ஒரு ஆவணத்தில் விவரங்கள் மட்டுமே கேள்விக்குள்ளாகும் போது, அந்த ஆவணம் மட்டுமே செல்லுபடியற்றது என்று கருத முடியுமா அல்லது அந்த ஆவணங்களைக் கூட பதிவுச் சட்டத்தின் பிரிவு 77 ஏ இன் கீழ் சார்பதிவாளரால் ரத்து செய்ய முடியுமா;

    iii) பதிவுச் சட்டம், 1908 இன் பிரிவு 22 ~ ஏ அல்லது 22 ~ பி க்கு முரணாக ஆவணங்களை பதிவு செய்வதற்கு மட்டும் பிரிவு 77 ஏ இன் கீழ் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட வேண்டுமா?

    iv) பதிவுச் சட்டத்தின் பிரிவு 77A இன் கீழ் அத்தகைய அதிகாரத்தைப் பயன்படுத்துவது இயல்பில் எதிர்காலமாக இருக்க முடியுமா(Prospective Date) அல்லது இயற்கையில் முன்தேதியிட்டு(retrospective date) இருக்க முடியுமா?

    என்பனவாகும்..

    பிப் 2 ம் தேதிய தீர்ப்பு

    இதற்கிடையில்,  சட்டம் அமலுக்கு வந்த  16 ஆகஸ்ட் 2022 க்கு பிறகு  பதிவு செய்யப்பட்ட ஒரு போலி பத்திரம்  ரத்து செய்ய வேண்டும் என்று கூறி  மாவட்டப் பதிவாளரை ஒருவர் அணுகிய போது,  மேற்குறிப்பிட்ட சுற்றறிக்கையைச் சுட்டிக்காட்டி  இப்போது எந்த விசாரணையும் மேற்கொள்ள முடியாது.  என்று மாவட்டப் பதிவாளர் திருப்பி அனுப்பி உள்ளார்.  இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில்  அந்த விரிவான அமர்வுக்கு அனுப்பப்பட்ட பிரச்சினை,  பழைய  போலி பத்திரங்களுக்கு இந்தச் சட்ட திருத்தம் பொருந்துமா என்பதை பற்றி  ஆராய்வதற்குத் தானே ஒழிய(retrospective effect),  இந்தச் சட்ட திருத்தம் அமலுக்கு வந்ததற்குப் பின்(prospective effect)  பதியப்பட்ட  போலிப்   பத்திரங்கள் மீது  விசாரணை நடத்தி  முடிவெடுப்பதற்கு எந்தத் தடையும் இல்லை என்ற  மனுதாரரின் வாதத்தை பிப் 2-ம் தேதி நீதிமன்றம்  ஏற்றுக் கொண்டுள்ளது.இது வேறொரு அமர்வு.

     ஆனாலும்,  மேலும் பல பிரச்சினைகளும் கூட  தீர்க்கப்படாமல் இருக்கும் பின்னணியில்,  விரிவாக்கப்பட்ட அமர்வின்  அதாவது லார்ஜர் பெஞ்சின்  தீர்ப்பு   வரும் வரை  இந்த பிரச்சனையில்  எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என்பது தெளிவு.ஏனெனில் தீர்ப்புகள் எப்படி வந்தாலும், அவற்றை அமல் படுத்த பதிவுத்துறையிலிருந்து  சுற்றறிக்கை  அனுப்பப்பட்டால் அன்றி,  மாவட்டப் பதிவாளர் அலுவலகங்களில்  எந்த மனுவையும் வாங்க  மாட்டார்கள்.

    நிறைவாக…

    இந்தச் சட்ட திருத்தம் கொண்டு வந்தது  நீதிமன்றத்தின்  தொடர் வற்புறுத்தலின் பெயரிலும் அறிவுரையின் பெயரிலும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்தச் சட்ட திருத்தம் வந்த பின்னரும்  அரசின் இந்த நடவடிக்கையை  நீதியரசர்கள்  வெகுவாகப் பாராட்டினர்.  ஆனாலும்,  சட்டத்தை அமல் நடத்தும் போது  முளைக்கும் பிரச்சினைகளை  தீர்க்காமல்  அடுத்த கட்டத்திற்கு நகர முடியாது என்பது தான் உண்மை.

     இப்போது நீதிமன்றமும்,  அரசும்    இந்த பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதில்  ஆர்வத்துடன் செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.

     விரிவு நீதிமன்ற அமர்வின் தீர்ப்பிற்காக  அனைத்து தரப்பினரும்  காத்திருக்கின்றார்கள். அடுத்த நகர்வு மார்ச் 26 ம் தேதிக்குப் பின்…